Sunday 28 April 2013

ஒருதரம் ஒரே தரம் | Oru Tharam Ore Tharam

ஒருதரம் ஒரே தரம் இதயத் தூய்மை வேண்டும்
இறைவரம் நிரந்தரம் உதயம் காண்பேன் மீண்டும் - 2
முறிந்த உறவு துளிர காய்ந்த இதயம் குளிர
மனதில் அமைதி நிலவ தூய அன்பு மலர - 2

இருளில் பிறந்து அருளில் வளர்ந்து மகனாய் வாழ்ந்த காலம்
பின்பு பிரிந்து திரிந்த காலம் - 2
இனியொரு தரம் இறைவனின் கரம்
விலகிடின் என்ன சுகம் சொல் மனமே - 2

உலக வாழ்வில் உறவும் பிரிவும் விலக்கு இல்லா நியதி
அதை மறுப்போர் இல்லை உறுதி - 2
தினம் அவர் தரும் உறவினில் வரும்
சுகமோ என்ன சுகம் என் மனமே - 2 

No comments:

Post a Comment