Saturday 4 January 2014

Infant Jesus Church Bangalore Annual Feast 2014 | குழந்தை இயேசு திருத்தல ஆண்டு விழா 2014


                               பெங்களூரு, அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் 43-வது  ஆண்டு விழா 04/01/2014 சனிக் கிழமையன்று மாலை 5.45 மணிக்கு  கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெங்களுரு உயர் மறை மாவட்ட பேராயர் பேரருட்திரு. டாக்டர் பெர்னார்ட் மோரஸ் அவர்கள் தலைமையேற்று கொடியேற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் திரு K.J. ஜார்ஜ் அவர்கள் மற்றும் சாந்திநகர் சட்ட மன்றத் தொகுதி M.L.A திரு N.A. ஹாரிஸ் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

                         திருத்தல அதிபர் மற்றும் பங்குத்தந்தை அருட்தந்தை . P. மைக்கேல் அந்தோணி , திருத்தல நிர்வாகி, அருட்தந்தை ஆரோக்கிய தாஸ், உதவி பங்குக் குருக்கள் அருட்தந்தை ஜஸ்டின் துரை ராஜ் மற்றும் அருட்தந்தை மாக் டொனல்ட் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை மற்றும் நன்றியுரை வழங்கினார்கள்.

நவநாள் திருப்பலி நேரங்கள்:


        காலை                                                    மாலை  


நேரம்      மொழி                                        நேரம்      மொழி  
05.45         தமிழ் & ஆங்கிலம்                   03.00          மலையாளம்
06.30         ஆங்கிலம்                                    04.00          கொங்கனி
08.00         கன்னடம்                                     05.00          ஆங்கிலம்
09.00         தெலுங்கு                                     06.00          தமிழ்
10.00         கன்னடம்
11.15         தமிழ்

ஞாயிறு திருப்பலிகள்:

(05/01/2014
மற்றும் 12/01/2014)
   

     காலை                                                    மாலை

நேரம்      மொழி                                      நேரம்      மொழி  
05.45         தமிழ்                                           03.00          மலையாளம்
07.00         ஆங்கிலம்                                  04.00          கொங்கனி
08.30         தமிழ்                                           05.00          ஆங்கிலம்
10.00         கன்னடம்                                   06.00          தமிழ்
11.30         தமிழ்

* நவநாட்களின் ஒவ்வொரு நாளும் மாலை 06.00 மணி திருப்பலி முடிந்ததும் ஆராதனை மற்றும் நோயாளிகளை குணப்படுத்தும் நற்கருணை ஆசீர் நடைபெறும்.

திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகள்:

கூட்டுத் திருமணம்:


             05/01/2014 ஞாயிற்றுக்கிழமையன்று, காலை 10.00 மணி கன்னடம்  மற்றும் 11.30 மணி தமிழ் திருப்பலியில் கூட்டுத் திருமணங்கள் நடைபெறும்.

நோயாளிகளுக்கான சிறப்புத் திருப்பலி:

           11/01/2014 சனிக்கிழமையன்று, காலை 10.00 மணி கன்னடம் மற்றும் 11.30 மணி தமிழ் திருப்பலியில் நோயாளிகளுக்கான சிறப்புத் திருப்பலி நடைபெறும்.

பொன்விழா கொண்டாடும் தம்பதியர்களுக்கான சிறப்புத் திருப்பலி:

             12/01/2014  ஞாயிற்றுக்கிழமையன்று, காலை 10.00 மணி கன்னடம் மற்றும் 11.30 மணி தமிழ் திருப்பலியில் பொன்விழா கொண்டாடும் தம்பதியர்களுக்கான சிறப்பு திருப்பலி சிறப்புத் திருப்பலி நடைபெறும்.

திவ்விய நற்கருணை ஆராதனை:

            ஒவ்வொரு நாளும் காலை 06.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை திவ்விய நற்கருணை ஆராதனை நடைபெறும்.

பாவ சங்கீர்த்தனம்:


            ஒவ்வொரு நாளும் காலை 09.00 மணி முதல் 12.00 மணி வரை மற்றும் மாலை 04.00 மணி முதல் 06.00 மணி பாவ சங்கீர்த்தனம் கேட்கப்படும்.

திருவிழா திருப்பலிகள்:


             14/01/2014 செவ்வாய்க்கிழமையன்று திருவிழா சிறப்புத் திருப்பலி நடைபெறும்.

        காலை                                                        மாலை

நேரம்      மொழி                                           நேரம்      மொழி  
05.00         (தன்னார்வத் தொண்டர்கள்)                        01.00          கன்னடம்
05.45         தமிழ்                                                02.00          மலையாளம்
07.00         ஆங்கிலம்                                      03.00          கொங்கனி
08.30         தமிழ்                                                04.00          ஆங்கிலம்
10.00         கன்னடம்                                        05.00          தமிழ்
11.30         தமிழ்

                     மாலை 06.00 மணிக்கு பேராயர் பேரருட்திரு. பெர்னார்ட் மோரஸ் அவர்களால் தேர் அர்ச்சிக்கப்பட்டு தேர்ப்பவனி நடைபெறும். தேர்ப்பவனியைத் தொடர்ந்து திவ்விய நற்கருணை ஆசீர் மற்றும் திருப்பலி நடைபெறும்.

தொடர்புக்கு:


குழந்தை இயேசு திருத்தலம்,
விவேக் நகர்,
பெங்களூரு-560047.
தொலை பேசி எண்: 080 25301206