Wednesday 29 May 2013

உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு | Ummai Allamal Enakku Yaar Undu

உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு -4
என் இயேசையா அல்லேலூயா -4

இன்பத்திலும் நீரே, துன்பத்திலும் நீரே -2
எவ்வேளையும் ஐயா நீர் தானே -2  - உம்மை அல்லாமல்

என் ஸ்நேகமும் நீரே, என் ஆசையும் நீரே -2
என் எல்லாமே ஐயா நீர் தானே  -2   - உம்மை அல்லாமல்

இம்மையிலும் நீரே, மறுமையிலும் நீரே  -2
எந்நாளுமே ஐயா நீர்தானே -2  - உம்மை அல்லாமல்

Sunday 26 May 2013

தொடும் என் கண்களையே | Thodum En Kankalaiyae

தொடும் என் கண்களையே | Thodum En Kankalaiyae 

தொடும் என் கண்களையே உம்மை நான் காண வேண்டுமே
இயேசுவே உம்மையே நான் காண வேண்டுமே -2

தொடும் என் காதுகளை உம் குரல் கேட்க வேண்டுமே
இயேசுவே உம் குரலைக் கேட்க வேண்டுமே


தொடும் என் நாவினையே உம் புகழ் பாட வேண்டுமே
இயேசுவே உம் புகழைப் பாடவேண்டுமே


தொடும் என் கைகளையே உம் பணி செய்ய வேண்டுமே
இயேசுவே உம் பணியைச் செய்ய வேண்டுமே

தொடும் என் மனதினையே மனப் புண்கள் ஆற வேண்டுமே
இயேசுவே மனப் புண்கள் ஆற வேண்டுமே


தொடும் என் உடலினையே உடல் நோய்கள் தீர வேண்டுமே
இயேசுவே உடல் நோய்கள் தீர வேண்டுமே

தொடும் என் ஆன்மாவையே என் பாவம் போக்க வேண்டுமே
இயேசுவே என் பாவம் போக்க வேண்டுமே

தொடும் என் இதயத்தையே உம் அன்பு பெருக வேண்டுமே
இயேசுவே உம் அன்பு பெருக வேண்டுமே



Friday 24 May 2013

தூய ஆவி பாடல்கள் | Holy Spirit Songs in Tamil

1. ஆவியானவரே அன்பின் ஆவியானவரே | Aaviyanavarae Anbin Aaviyanavarae
 

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும் எங்கள் மத்தியிலே - 2


உலையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே - 2
பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே - 2

சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே - 2
ஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே - 2

ஆவியின் வரங்களினால் எம்மையும் நிப்பிடுமே - 2
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே - 2 


||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

2. தூய ஆவியே துணையாக வருவீர் | Thooya Aaviyae Thunaiyaga Varuveer 

தூய ஆவியே துணையாக வருவீர்
இயேசுவின் சாட்சிகளாய் எம்மை மாற்றிடுவீர் - 2


மனத்தின் தீமைகளை மன்னிக்க வருவீர்
மனத்தின் கீறல்களை மாற்றிட வருவீர் - 2

மனத்தின் பாரங்களைப் போக்கிட வருவீர்
மனத்தின் காயங்களை ஆற்றிட வருவீர் - 2

தாழ்வு மனம் நீக்கித் தேற்றிட வருவீர்
தடுமாறி நான் விழாமல் தாங்கிட வருவீர் - 2

பாவப் பிடிநின்று மீட்டிட வருவீர் 
பாவக் கறை கழுவி தூய்மை தர வருவீர் - 2

கல்மன இதயத்தைக் கரைத்திட வருவீர்
இதயத்தின் வெறுப்புகளை விலக்கிட வருவீர் - 2

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||| 


3. வானம் திறந்து வெண்புறா போல | Vaanam Thiranthu Venpura Pola

வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும்
தேவா வல்லமை தர வேண்டும்   (2)
 
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே   (2) 


மறுபடியும் நான் பிறக்க வேண்டும்
மறுரூபமாக மாற வேண்டும்  (2)  -யோர்தான்

வரங்கள் கனிகள் பொழியணுமே
வல்லமையோடு வாழணுமே   (2)  -யோர்தான்

பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும்
பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும்   (2)  -யோர்தான்

அற்புதம் அதிசயம் நடக்கணுமே
சாட்சிய வாழ்வு வாழணுமே   (2) -யோர்தான்

கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும்
காயங்கள் எல்லாம் குறைய வேண்டும்  (2)  -யோர்தான்


||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

4. உன்னத வல்லமையை இறைவா எனக்குத் தாரும் | Unnatha Vallamaiyai Iraiva Enakku Thaarum

உன்னத வல்லமையை இறைவா எனக்குத் தாரும்
பரலோக வல்லமையை இந்நேரம் ஊற்றுமைய்யா  -2

உலர்ந்து போன எலும்புகளாய்
உலரப்பட்ட எங்களிலே  -2
உயிர் தரும் ஆவியைத் தந்து
வீரச்சேனையாய் மாற்றிடுமே  -2

வாக்களித்த வல்லமையை
பெந்தேகோஸ்தே நாளினிலே  -2
பொழிந்த இறைவா எங்களிலும் 
நிரம்பி வழியச் செய்தருளும  -2

அடிமை விலங்குகள் தகர்ந்திடவே
அக்கினி ஆவியை ஈந்திடுமே   -2
தடைகளும் களைகளும் எரிந்திடவே
மீட்பின் ஆவியை ஊற்றிடுமே   -2

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

5. வல்லமை தேவை தேவா | Vallamai Thaevai Thaeva

வல்லமை தேவை தேவா வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா இப்போது தாரும் தேவா

பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை - 2
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை - 2

இறுதி நாளில் எல்லோர் மேலும் ஆவியை பொழிவேன் என்றீர் - 2
மூப்பர் வாலிபர் யாவரும் தீர்க்க தரிசனம் சொல்வாரே - 2

பெந்தேகோஸ்தே நாளின் போது பெரிதான முழக்கத்தோடு - 2
வல்லமையாக இறங்கி வரங்களினாலே நிரப்பும் - 2

 ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||


6. ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே | Ootru Thannerae Enthan Theva Aaviyae

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கி வா
ஆசீர்வதியும் என் நேச கர்த்தாவே 
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் 

கன்மலையைப் பிளந்து வனாந்தரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்  
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே --ஊற்றுத் தண்ணீரே

ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தரே
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுமே 
கனிதந்திட நான் செழித்தோங்கிட 
கர்த்தரின் கரத்தில் நித்தம் கனம் பெற்றிட --ஊற்றுத் தண்ணீரே

இரட்சிப்பின் ஊற்றுகள் எந்தன் சபை தனிலே
எழும்பிட இந்த வேளை இறங்கிடுமே
ஆத்மா பலமும் பரிசுத்தமும்
ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே --ஊற்றுத் தண்ணீரே
 ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

7. ஆவியான தேவனே அசைவாடுமே | Aaviyana Thevanae Asaivadumae

ஆவியான தேவனே அசைவாடுமே -2
அருட்பொழியும் ஜீவனே ஆட்கொள்ளுமே - 2
வாரும் ஆவியே தூய ஆவியே
வாரும் ஆவியே தூய ஆவியே - 2

தெய்வீக அக்கினியே இறங்கி வாருமே - உம்
திருக்கரத்தின் வல்லமையை பொழிந்திடுமய்யா - 2

ஆன்மாவின் ஆன்மாவே அன்பின் ஆவியே - என்
சுவாசமாக என்னோடு தங்கிடுமய்யா - 2

தூய தேவன் பேரொளியே என்னில் வாருமே - என்
துணையாக என் வாழ்வில் ஒளிர்ந்திடுமய்யா - 2
 
 ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

8. எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே | Engalukkullae Vasam Seiyyum Aaviyanavarae


எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
இந்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லுமையா   (2)
 
ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே   (2)


எப்படி நான் ஜெபிக்கவேண்டும் எதற்காக ஜெபிக்க வேண்டும்
கற்றுத் தாரும் ஆவியானவரே   (2)
வேத வசனம் புரிந்து கொண்டு விளக்கங்களை அறிந்திட
வெளிச்சம் தாரும் ஆவியானவரே   (2)  -ஆவியானவரே

கவலை கண்ணீர் மறக்கணும் கர்த்தரையே நோக்கணும்
கற்றுத்தாரும் ஆவியானவரே  (2)
செய்த நன்மை நினைக்கணும் நன்றியோடு துதிக்கணும்
சொல்லித் தாரும் ஆவியானவரே  (2)  -ஆவியானவரே


 ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

9. ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே | O Parisuttha Aaviyae En Aanmavin Aanmavae


ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கின்றேன் -இறைவா
ஆராதனை செய்கின்றேன் - 2

என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்
புது வலுவூட்டி என்னைத் தேற்றும்
என் கடமை என்னவென்று காட்டும்
அதை கருத்தாய் புரிந்திடத் தூண்டும்
என்ன நேர்ந்தாலும் நன்றி துதி கூறி பணிவேன் என் இறைவா
உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும்

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
 

Thursday 16 May 2013

நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு | Nilaiyilla Ulagu Nijamilla Uravu

நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு
நிலையானதொன்றும் இங்கில்லை
நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம்
நீ மட்டும் போதும் எப்போதும்
நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும்
நீ மட்டும் போதும் எப்போதும்

ஆசையிலே பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து
ஆடி இங்கு அடங்குது வாழக்கை
வாழ்வுதரும் வார்த்தை வாழ்க்கைதனை வளர்த்தால்
வசந்தம் வந்து எம்மில் என்றும் தங்கும்
நீ மட்டும் போதும என் வாழ்வு மாறும்  --2
நீ மட்டும் போதும் எப்போதும்

பொய்மையிலே விழுந்து போலியாக நடந்து
பொழுதிங்கு போகுது கழிந்து
உண்மைதனை உணர்ந்து உறுதியுடன் எழுந்தால்
ஊதியங்கள் தேவையில்லை நமக்கு
நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும் --2
நீ மட்டும் போதும் எப்போதும்
 

இயேசு இயேசு இயேசு என்று சொல்ல ஆசைதான் | Yesu Yesu Yesu Entru Solla Asaithan

இயேசு இயேசு இயேசு என்று சொல்ல ஆசைதான்
நான் எப்போதும்
ங்க கூட இருக்க ஆசைதான் - 2
ங்க மடியில கண்ணுறங்க ரொம்ப ஆசைதான்  (2) - நான்
ங்களோட சொந்தமாக மாற ஆசைதான் - 2 

ங்க கூட கொஞ்ச நேரம் பேச ஆசைதான்  (2) -நான்
ங்களோட வார்த்தைகளக் கேட்க ஆசைதான் - 2

உங்க அன்பில் நானும் தினம் வாழ ஆசைதான் (2) - நான் 
ங்களோட செல்லமாக மாற ஆசைதான் - 2 

வாழ்வை அளிக்கும் வல்லவா | Vazhvai Alikkum Vallava

வாழ்வை அளிக்கும் வல்லவா
தாழ்ந்த என்னுள்ளமே
வாழ்வின் ஒளியை ஏற்றவே
எழுந்து வாருமே

ஏனோ இந்த பாசமே
ஏழை என்னிடமே
எண்ணில்லாத பாவமே
புரிந்த பாவி மேல்

உலகம் யாவும் வெறுமையே
உன்னை யான் பெறும்போது
உறவு என்று இல்லை உன்
உறவு வந்ததால்

தனிமை ஒன்றே ஏங்கினேன்
துணையாய் நீ வந்தாய்
அமைதியின்றி ஏங்கினேன்
அதுவும் நீ என்றாய்

அலையொளிர் அருணனை அணிந்திடுமா | Alaiyolir Arunanai Aninthiduma

அலையொளிர் அருணனை
அணிந்திடுமா மணிமுடி மாமரி நீ

வாழ்க்கையின் பேரரசி
வழுவில்லா மாதரசி
கலையெல்லாம் சேர்ந்தெழு தலைவியும் நீயல்லோ
காலமும் காத்திடுவாய்

அகால வேளையிலே அம்மா உன் கருணையாலே
பொல்லாத ஊழியின் தொல்லைகள் நீங்கிட‌
வல்ல உன் மகனிடம் கேள்

இயேசு நாமம் பாடப்பாட‌ | Yesu Namam Padapada

இயேசு நாமம் பாடப்பாட‌
இனிமை பொங்குதே அவர்
இல்லம் வாழ எந்தன் இதய‌ம்
ஏங்கித் த‌விக்குதே

ஓங்கும் குர‌லைக் காக்க‌ வேண்டும்
உன் நாம‌ம் பாட‌வே
என் உள்ள‌ம் தேற‌வே என் தாக‌ம் தீர‌வே
உன் அன்பில் வாழ‌வே
என் தேவா தேவா வா

ஏங்கும் விழிக‌ள் தேற்ற‌ வேண்டும்
வான் தீப‌ம் காண‌வே
என் அன்பில் வாழ‌வே உன்னோடு சேர‌வே
என்னில் நீ வாழ‌வே
என் தேவா தேவா வா

Wednesday 15 May 2013

புனித அந்தோணியார் பாடல்கள் | St Anthony's Songs in Tamil



1. அன்புத் தந்தையே கருணை தெய்வமே | Anbu Thanthaiyae Karunai Thaivamae
 
அன்புத் தந்தையே கருணை தெய்வமே எங்கள் அந்தோணியாரே
புனித நகரிலே புதுமை புரிந்திடும் பதுவைப் புனிதரே வாழ்க - 2
வாழ்க வாழ்க வண்ணத் திருவடி புனிதர் பூவடி வாழ்க

பணியில் வாழ்வும் பகிர்வில் நிறைவும் வரவும் உம் வரவால்
தணியும் நோய்கள் நகரும் பிணிகள் தலைவா உன் தயவால் - 2
தவிக்கும் உள்ளம் தனை உயர்த்த தர்மம் தான் என்றாய்
உரிமை வாழ்வை உலகிற்கு உயர்த்த புனித நகரிலே

இறைவன் ஒளியில் நாங்கள் செல்ல வழியைச் சொன்னவரே
இறை நல்வாழ்வில் நிதமும் வாழப் பாதை தந்தவரே - 2
எந்தன் நெஞ்சில் நீ இருந்து உண்மை நெறி செல்ல
இறைவன் வாக்கை வாழ்ந்து காட்டிட புனித நகரிலே

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

2.மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார| Mannulagil Intru Thevan Irangi Varugirar

விண்ணில் தோன்றும் தாரகை எல்லாம் தேவதையாகும்
வெண்ணிலவோ தேவன் அமரும் வாகனமாகும்
ஞானஜோதியே உயர்வான ஜோதியே
தானாகவே உலகில் இறங்கும் தர்மஜோதியே

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்
எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே
ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வனாகிறார்

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
இறங்கி வருகிறார்

மழலை மொழிகள் கேட்க கேட்க மனது கொள்ளாதோ
மடியில் வந்து அமரும் போது மயக்கம் கொள்ளாதோ
பார்வை பட்டால் போதும் நம் பாவம் யாவும் போகும்
கைகள் பட்டால் போதும் உடன் கவலை எல்லாம் தீரும்

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
இறங்கி வருகிறார்

அடியவர்கள் மடியினிலே ஆண்டவரோ பிள்ளை
அரவணைக்கும் அடியவரோ இறைவனுக்கும் அன்னை
கொடுமை பாவம் துயரிலிருந்து மீட்பவர் வந்தார்
குலம் தழைக்க குழந்தையாக மேய்ப்பவர் வந்தார்  -மண்ணுலகில்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||


புனித பிரான்சிஸ் சவேரியார் பாடல்கள் | St Francis Xavier Songs in Tamil



1. உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் | Ulagamellam Enakkathayam Ena Vazhnthavar

உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை - 2
அழியும் செல்வம் சேர்ப்பதா அழியா ஆன்மாவைக் காப்பதா - 2
இந்த கேள்விக்குப் பதிலாய் வாழ்ந்தவர் யார்
அவரே புனித சவேரியார்

பொன்னும் பொருளும் தேடுகிறோம்
பட்டம் பதவியை நாடுகிறோம் - 2
எதுவும் நிறைவு தருவதில்லை எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை
முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லா ஆன்மாதான் - 2

அறிவும் திறனும் அமைவதில்லை
உறவும் நட்பும் தொடர்வதில்லை - 2
தேடும் எதுவும் கிடைப்பதில்லை
கிடைக்கும் பலவும் நிலைப்பதில்லை
முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லா ஆன்மாதான் - 2 

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

2. பாமாலை பாடிடுவோம் சவேரியாரே | Paamalai Padiduvom Savariyarae

நல்ல காலம் பொறந்திருச்சு நாடும் வீடும் செழிச்சிருச்சு
புனிதர் கோயில் தொறந்திருச்சு நமக்கு புதுவாழ்வு மலர்ந்திருச்சு

பாமாலை பாடிடுவோம் சவேரியாரே - உங்க
பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே - உமக்கு
கோவில்கட்டி கும்பிடுவோம் சவேரியாரே

இயேசுசாமி வார்த்தைகளை பேசி வந்த போதகரே
இறையரசின் தூதுவரே சவேரியாரே - 2
இஞ்ஞாசியார் கண்டெடுத்த இயேசு சபை மாமுனியே - 2
இறைவன் தந்த அருங்கொடையே சவேரியாரே
 
வாழியவே வாழியவே சவேரியாரே - எங்க
விசுவாச நாயகனே சவேரியாரே


தென்னாட்டுப் பகுதியிலே கடலோர ஊர்களிலே
நற்செய்தி போதித்த சவேரியாரே - 2
நம்பி வந்த எங்களது முன்னோர்கள் யாவருக்கும் - 2
ஞானஸ்நானம் வழங்கிய சவேரியாரே -வாழியவே

கட்டுமர ஓடத்திலே கடல் மீது போகையில
கிட்டிருந்து காத்திடுமே சவேரியாரே - 2
அலையோடு போராடி வலைவீசும் வேளையிலே - 2
நல்லாசி தந்திடுமே சவேரியாரே -வாழியவே

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| 

 

Monday 13 May 2013

நீர் எனக்கு போதும் | Nee Enakku Pothum






நீர் எனக்கு போதும் -4
எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் சொந்தம் -2
இயேசுவே நீர் எனக்கு போதும் -2

என் தாயும் தந்தையும் நீர்தானே -
தாங்கிடும் துருகமும் நீர்தானே (2)
சுற்றமும் நட்பும் நீர்தானே -
சுமந்திடும் சுமைதாங்கி நீர்தானே (2) -நீர் எனக்கு

தேற்றிடும் சினேகிதன் நீர்தானே -
ஆறுதல் தேடுதல் நீர்தானே (2)
ஞானமும் அறிவும் நீர்தானே -
என் சுகம் பெலனும் நீர்தானே
(2)-நீர் எனக்கு

Saturday 11 May 2013

இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா | Iyarkaiyil Uranthidum Inaiyatta Iraiva

இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா - என்
இதயத்தில் எழுந்திட வா
என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு
காத்திடு என் தலைவா   --2

உந்தன் அன்பு உறவின்றி எனக்கு - இங்கு
சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயனென்னவோ --2
மெழுகாகினேன் திரியாக வா
மலராகினேன் மணமாகவா  --2

உருவில்லா இறைவன் உன் உதவியின்றி
உலகத்தில் எதுவும் நடந்திடுமோ  --2
குயிலாகினேன் குரலாகவா
மயிலாகினேன் நடமாடவா  --2


ஆனந்த மழையில் நானிலம் மகிழ | Ananda Mazhaiyil Nanilam Mahizha

ஆனந்த மழையில் நானிலம் மகிழ
மன்னவன் எழுகின்றார்
ஆயிரம் நிலவொளியோ -என்னை
ஆண்டிடும் இறையரசோ
அவனியை மாற்றிடும் அருட்கடலோ

மன்னவனே என்னிதயம் பொன்னடி பதிக்கின்றாய்
விண்ணகமே என் இதயம் அன்புடன் அமைக்கின்றாய்
இனி என் வாழ்விலே ஒரு பொன்னாளிது
பண்பாடவோ என்றும் கொண்டாடவோ
மலர்கின்ற புது வாழ்விலே - இனி
சுகமான புது ராகமே
என்றென்றும் உண்டாகும் பேரின்பமே
பேரின்பமே பேரின்பமே

சேற்றினிலே தாமரையாய் தேர்ந்தென்னை எடுத்தாயோ
காற்றினிலே நறுமணமாய் கலந்தென்னில் நிறைந்தாயோ
எனில் ஒன்றாகினாய் நான் நன்றாகினேன்
பணிவாழ்வுக்காய் என்னைப் பரிசாக்கினேன்
மலர்கின்ற புது வாழ்விலே - இனி
சுகமான புது ராகமே
என்றென்றும் உண்டாகும் பேரின்பமே
பேரின்பமே பேரின்பமே

காணிக்கைப் பாடல்கள் | Kanikkai Padalgal

1. படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம் | Padaippu Ellam Umakkae Sontham

படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்
நானும் உந்தன் கைவண்ணம்
குயில்கள் பாடும் கிளிகள் பேசும்
என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே - 2

இயற்கை உனது ஓவியம் இணையில்லாத காவியம் - 2
அகிலம் என்னும் ஆலயம் நானும் அதில் ஓர் ஆகமம் - 2
உள்ளம் எந்தன் உள்ளம் அது எந்நாளும் உன் இல்லமே - 2

இதயம் என்னும் வீணையில் அன்பை மீட்டும் வேளையில் - 2
வசந்த ராகம் கேட்கவே ஏழை என்னில் வாருமே - 2
தந்தேன் என்னைத் தந்தேன் என்றும் என் வாழ்வு உன்னோடு தான் - 2

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

2. பலிபீடத்தில் வைத்தேன் என்னை | Pali Beedatthil Vaithaen Ennai

பலிபீடத்தில் வைத்தேன் என்னை
பாவி என்னை ஏற்றுக் கொள்ளும் - 2

நிலையில்லா இந்த பூவுலகில்
நித்தம் உன் பாதையிலே - 2
நின் சித்தம் போல் உம் கரத்தால் - 2
நித்தம் வழிநடத்தும் - 2

வாலிப நாட்களில் வாஞ்சையுடன்
வந்தேன் உன் திருப்பாதம் - 2
வாருமய்யா வந்து என்னை - 2
வல்லமையால் நிரப்பும் - 2

பரிசுத்தம் இல்லா இவ்வுலகில்
பரிசுத்தமாய் ஜீவிக்க - 2
பரிசுத்தமான உம் இரத்தத்தால் - 2
பரிசுத்தமாக்கி விடும் - 2 

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

3. காணிக்கை தந்தோம் கர்த்தாவே | Kanikkai Thanthom Karthavae

காணிக்கை தந்தோம் கர்த்தாவே
ஏற்றுக்கொள் எம்மை இப்போதே
கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே
காணிக்கை யார் தந்தார் நீர்தானே

நாங்கள் தந்த காணிக்கை எல்லாம்
இரட்சகர் கொடுத்தது
மேகம் சிந்தும் நீர்த்துளியெல்லாம் பூமி கொடுத்தது
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
ஆகாயம் மாறும் இறைவனின் மகனே
ஆனாலும் உம் அன்பு மாறாது

ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே
ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே
கண்ணீரைப்போல காணிக்கை இல்லை
கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே
கண்ணீரின் அர்த்தங்கள் நீர்தானே

காணிக்கை தான் செலுத்த வந்தோம்
கருணை கிடைக்கட்டும்
தேவன் தந்த ஜீவன் எல்லாம்
புனிதம் அடையட்டும்
என்னண்டை வாரும் பாவங்கள் தீரும்
ஏனென்று கேளும் இறைவனின் மகனே
எம்மையே காணிக்கை தந்தோமே

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

4. அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம் | Anbodu Vanthom Kanikkai Thanthom

அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்
கனிவோடு ஏற்பாய் ஆண்டவரே
உம் பலியோடு சேர்ப்பாய் தூயவனே -2

பொன்னான வாழ்வை புடமிட்டு வைத்தோம்
பூவாக மணம் வீச வைத்தோம் -2
புதிரான வாழ்வே எதிரானதாலே -2
பொலிவாகச் செய்வாய் ஆண்டவனே
உம் அருளோடு அணைப்பாய் மாபரனே

அருளான வாழ்வு இருளானதாலே
திரியாக எமை ஏற்றி வைத்தோம் -2
திரியாகக் கருகி மெழுகாக உருகி  -2
பலியாக வைத்தோம் ஆண்டவனே
புது ஒளியாக மாற்றும் தூயவனே

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

5. இதய காணிக்கை இறவாத காணிக்கை | Ithaya Kanikkai Iravatha Kanikkai

இதய காணிக்கை இறவாத காணிக்கை
இறை மனித உறவின் சின்னமாம் அன்பின் காணிக்கை  -2
இறையே இதை ஏற்றிடுவாய் உனதாய் எனை மாற்றிடுவாய் -2

மேகங்கள் கூடிடவே வான்மழை அருவியாகுமே
உன் அருளுக்குச் சான்றாகுமே -2
இறைவா உனைப்போல் வார்த்தையை வாழ்வாக்கி
வழிகாட்டிச் சென்றிட வரம் ஒன்று தா -2  --இதய காணிக்கை

எண்ணங்கள் உயர்ந்திடவே உள்ளங்கள் கோயிலாகுமே
நல்வாழ்வு அதன் பரிசாகுமே -2
கருணா உனைப்போல் மாறாத அன்பினால் அயலாரை
நேசிக்கும் நல் உள்ளம் தா -2  --இதய காணிக்கை


|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

6. அர்ப்பண மலராய் வந்தேன்| Arpana Malarai Vanthaen

அர்ப்பண மலராய் வந்தேன்
அர்ச்சனை ஆக்கினேன் என்னை - 2
மணமில்லாத மலரானாலும் இதழ்வாடியே போனாலும் - 2
வேள்வியில் சேர்த்துக்கொள்வாய் - அந்த
ஜோதியில் நிறைவு கொள்வேன் - 2

கோதுமை மணியாய் மடிந்து - என்னை
வெண்ணிற அப்பமாய் தந்தேன் - 2
என்னுடல் உன்னுடலாகிடவே உன்னுடலாய் நான் மாறிடவே
மகிழ்வுடன் தந்தேனே என்னை கனிவுடன் ஏற்பாயே

விதியென்னும் சகதியில் சாய்ந்தேன் - புவி
அதிபதி உன் திட்டம் மறந்தேன் - 2
மதியில்லாதவன் ஆனாலும் கதியிழந்தே நான் போனாலும்
சுதியுடன் சேர்த்துக்கொள்வாய் நான் ஜதியுடன் பாட்டிசைப்பேன்

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| 

7. அன்பின் பலியாய் ஏற்பாய்  | Anbin Paliyai Yerpai

அன்பின் பலியாய் ஏற்பாய் - உன்னை
அணுகிடும் எளியவர் வேண்டுதல் கேட்பாய்
புண்படும் மனதின் துயர் தணிப்பாய் - எமைப் - 2
புண்ணிய வாழ்வில் நிலைபெறச் செய்வாய்

வாழ்வின் கொடைகள் பெறுகின்றோம் - அருள்
வள்ளலுன் கருணையில் வாழ்கின்றோம் - 2
முழுமுதல் தலைவா இறைஞ்சுகின்றோம் - 2 - எமைத்
திருப்பலிப் பொருளாய்த் தருகின்றோம்

படைப்பின் மீதே பரிவிருக்க - அந்தப்
பரிவால் உன் மகன் உயிர் கொடுக்க - 2
படைப்பே உன்னால் மகிழ்ந்திருக்க - 2 - உனில்
படைத்தோம் தூய்மை நிறைந்திருக்க

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| 

8. எல்லாம் தருகின்றேன் தந்தாய் | Ellam Tharugintren Thanthaai
 
எல்லாம் தருகின்றேன் தந்தாய் என்னையும் தருகின்றேன் - 2

இயற்கை ஈந்த மலர்கள் பறித்தே
தருவேன் உனக்கு காணிக்கை - 2
உழைப்பின் பயனாய் கிடைத்த பொருளை
என்னோடு இணைத்தே தருகின்றேன் - 2
பிறருக்காக வாழ்வதில் நானும்
என்னையே உம்மிடம் தருகின்றேன் - 2
பிறரின் சுமையை விரும்பிச் சுமக்க
என்னையும் தகுதி ஆக்குவாய் - 2

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| 

9. உழைக்கும் கரங்கள் படைக்கும் வளங்கள் | Ulaikkum Karangal Padaikkum Valangal

உழைக்கும் கரங்கள் படைக்கும் வளங்கள்
அப்பமாய் கொண்டு வந்தோம்
சிந்திடும் கண்ணீ சிதறிடும் செந்நீர்
கிண்ணத்தில் தருகின்றோம் (2)

ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர் மாற்றிடுவீர் எம்மை மாற்றிடுவீர்
ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர் வாழ்வின் உணவாய் மாற்றிடுவீர்


கோதுமை மணிகள் நொறுங்கும் மனங்கள் மகிழ வேண்டுமே
பகிர்ந்து வாழும் புதிய உலகம் படைக்க வேண்டுமே (2)  --ஏற்றிடுவீர் தந்தாய்
அடிமைத் தனங்கள் அடக்கு முறைகள் அழிய வேண்டுமே
தேவனின் ஆட்சி மனித மாட்சி வளர வேண்டுமே (2)   --ஏற்றிடுவீர் தந்தாய்

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| 

10. காணிக்கையாக வந்தேன்  | Kanikkaiyaga Vanthaen

காணிக்கையாக வந்தேன் கனிவோடு ஏற்றிடுவாய்
படைத்தவா பணிகின்றேன் பரமனே புகழ்கின்றேன்
குயவன் நீயே களிமண் நானல்லவா
குன்றாத உனது மகிமை நான் சொல்லவா
இறைவனே ஆகட்டும் உன் உளமே

அழகான உலகம் அதில் ஒரு மனிதம் அன்பாக நீ படைத்தாய்
அனைவரும் மகிழ்ந்து ஆனந்தம் பகிர்ந்து அமைத்திட நீ பணித்தாய் - 2
எல்லாமே உனதன்றோ என்றே யாம் உணர்ந்தோம்
வல்லவா உம் கையில் யாம் கொணர்ந்தோம்
உம் சித்தமே நிறைவேறுக உம் திட்டமே எங்கும் நிறைவாகுக

சூடாத மலரும் சுவைக்காத உணவும் கையிலே பயன் என்ன
காய்க்காத மரமும் கனியில்லா கொடியும் காய்ந்தும் இழப்பென்ன - 2
எம் வாழ்வின் பொருளாக உம் மீட்பின் அருளாக
உம் கையில் எம்மை யாம் கொடுத்தோம்
உம் சித்தமே நிறைவேறுக உம் திட்டமே எங்கும் நிறைவாகுக

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| 

11. என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன் | Ennai Thanthaen Ellam Thanthaen

என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன்
என் வாழ்வைப் பலியாக்கவே
உள்ளம் தந்தேன் உமக்கே தந்தேன்
பிறரன்பு பணி செய்யவே
என் இயேசுவே என் ஜீவனே
உம்மோடு உறவாடவே  --2

புகழோடு நான் வாழவில்லை உம்
புகழொன்றே எனக்குப் போதும்
அருள் வாழ்வினில் நான் வளர – உம்
அன்பொன்று எனக்குப் போதும்
உயர்வோடும் தாழ்வோடும் வாழும்போதும் – உம்
உறவொன்று எனக்குப் போதும்
மகிழ்வோடும் துயரோடும் வாழும்போதும் – உம்
கரமொன்றே எனைத் தேற்றிடும்

அயலாரிலே உம்மைக் காண
என்னை நான் பலியாக்கினேன்
ஆண்டவரே உம்மை அடைய
என்னை நான் தியாகம் செய்தேன்
உம் சித்தம் நாளும் நிறைவேற்றிட
என்னை நான் அர்ப்பணித்தேன்
நற்செய்தி பணியை நாளும் செய்ய
நாதனே என்னைத் தந்தேன்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

12. காணிக்கை தந்தோம் கனிவாய் ஏற்பாய் | Kanikkai Thanthom Kanivai Yerpai

காணிக்கை தந்தோம் கனிவாய் ஏற்பாய்
காலத்தைக் கடந்தவா இறைவா
எம் கண்ணீரைத் தருகின்றோம் தலைவா  --2

கண்ணீரிலும் செந்நீரிலும்
மூழ்கிடும் எம் மண்ணைத் தருகின்றோம்
ஏற்பாய் என் தேவா (2) --2
காயமும் குருதியும் நிதம் காணும்  --2
எம் உறவுகளைத் தருகின்றோம்
ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய்

துன்பங்களில் வாடுகின்ற
நொறுங்குண்ட உள்ளத்தைத் தருகின்றோம்
ஏற்பாய் என் தேவா (2) --2
நியாயமும் நீதியும் இனி நிலவ  --2
எம் நிலைகளையே ஏற்றிடுவாய்
ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

13. காணிக்கை தர நான் வருகின்றேன் | Kanikkai Thara Naan Varugintren

காணிக்கை தர நான் வருகின்றேன்
உன் கரங்களில் என்னைத் தருகின்றேன்
காணிக்கை தர நான் வருகின்றேன் (2)

என்னக் கொடுத்தாலும் பயனில்லை நான்
என்னைக் கொடுக்காமல் பொருள் கொடுத்தால் (2)
என்னையே தான் நீ கேட்கின்றாய் – நான்
என்னையே முழுவதும் தருகின்றேன் (2)

சிந்தனை சொல் செயல் திறன் அனைத்தும் – மனம்
உள்ளெழும் ஆசைகள் ஒவ்வொன்றும் (2)
ஒரு துளி நீராய்க் கலக்கின்றேன் – அதை
பயனுள்ள பலியாய் மாற்றிடுவாய் (2)

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

14. காணிக்கை தர வந்தோம் | Kanikkai Thara Vanthom
  
காணிக்கை தர வந்தோம் உன் மலரடி
பாதங்கள் வணங்க வந்தோம் (2)
வரங்களைப் பொழியும் நாயகனே – எம்
கரங்களைக் குவித்து வணங்கி வந்தோம்
உன் மலரடி பணிந்து வாழ்வினைத் தருவோம்

இயற்கையின் எழிலினிலே உனக்கு எம்
சந்தன மலர்களை எடுத்து வந்தோம்
தீபங்கள் ஏந்தி திருமுன் ஏற்ற கூடி வருகின்றோம் (2)
உனக்கென ஆயிரம் கீதங்கள் பாடி எம்மையே தருகின்றோம்

கோதுமை கதிர்மணி போல் இணைந்து
எம் வாழ்வினைக் காணிக்கை ஆக்க வந்தோம்
நாவினால் உந்தன் புகழினைப் பாட மேடை வருகின்றோம் (2)
வாழ்வினில் ஆயிரம் சேவைகள் ஆற்ற எம்மையே தருகின்றோம்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

15. அர்ப்பணித்தேன் என்னையே இயேசுவே | Arpanithaen Ennaiyae Yesuvae
  
அர்ப்பணித்தேன் என்னையே இயேசுவே  -உம்
அன்புப்பலிப் பீடத்திலே தியாகமாகுவேன் --2
உன் பாதையிலே பயணமாகுவேன்
உண்மைக்கான சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
வாழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடுவேன்

உள்ளங்கள் உயர்ந்துவாழ உம்மோடு பாடுபட
என்னை எந்நாளும் அளிக்கின்றேன் --2
இதய உணர்வுகள் இன்ப ராகங்கள்  --2
எல்லாம் உந்தன் பணிக்கு என அர்ப்பணிக்கின்றேன்

வாழ்வுக்குப் போராடும் உள்ளங்களில்
வளர்ந்தே வலுவூட்ட விழைகின்றேன் --2
வாழ்க்கைப் பலியிலே என்னையே தந்து  --2
தளர்ச்சி நீக்கி வளர்ச்சி காண வழியுமாகுவேன்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
 
16. தந்திட வருகின்றேன் நிறைவாய் | Thanthida Varugintren Niraivai

தந்திட வருகின்றேன் நிறைவாய் என்னையே உமக்காக-2
இருப்பதையெல்லாம் கொடுக்கின்றேன் கொடுத்தவர் நீரன்றோ -2 இறைவா

எனக்கென்று கொடுத்ததெல்லாம் எடுத்துக்கொள் முழுவதும் -2
இளமையும் வளமையும் நான் வழங்கிட வறியவர்க்கே -2
வரம் தருவாய் இறைமகனே

என்னையும் உன்னைப்போல உடைத்திட வருகின்றேன் -2
உலகோர் வாழ்ந்திடவும் உரிமைகள் அடைந்திடவும் -2
வரம் தருவாய் இறைமகனே

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
 
17. படைத்ததெல்லாம் தரவந்தோம் | Padaithathellam Thara Vanthom

படைத்ததெல்லாம் தரவந்தோம்
பரம் பொருளே உம் திருவடியில் --2
உன் நினைவு எல்லாம் பெயர் சொல்லும்
என் வாழ்வினிலே ஒளி வீசும்

உழைப்பினில் கிடைத்திட்ட பொருளெல்லாம்
உன்னதரே உந்தன் மகிமைக்கே  --2
தந்தையே தயவுடன் ஏற்றிடுவாய்  --2
தாழ்ந்து பணிந்து தருகின்றோம்   தருகின்றோம்  --2

வாழ்வினில் வருகின்ற புகழ் எல்லாம்
வல்லவரே உந்தன் மகிமைக்கே --2
கருணையின் தலைவா ஏற்றிடுவாய்  --2
கனிவாய் உவந்து தருகின்றோம்  தருகின்றோம்  --2

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

18. அடியோர் யாம் தரும் காணிக்கையை | Adiyor Yaam Tharum Kanikkaiyai

அடியோர் யாம் தரும் காணிக்கையை
அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே

பாவியென்றெம்மைப் பாராமல் - யாம்
பாவத்தின் தீர்வையை அடையாமல் --2
பரிகாரம் என ஏற்றிடுவாய்
பலியாய் எமை நீ மாற்றிடுவாய்

மேலொரு வாழ்வு உண்டு என்று - எம்
மேலெழும் துன்பத்தை மறக்கின்றோம்  --2
மேலும் துன்பங்கள் அடைந்தாலும்
மேன்மையின் பலியாய்த் தருகின்றோம்

வாழ்வுக்கு ஒரு நாள் முடிவு உண்டு - பின்
வாழ்வினில் எமக்கென்று எது உண்டு --2
என் மனம் அறிந்தவர் பயன் என்னவோ
எல்லாம் அறிந்தவர் நீரல்லவோ

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

19. எதை நான் தருவேன் இறைவா| Ethai Naan Tharuvaen Iraiva

எதை நான் தருவேன் இறைவா - உன்
இதயத்தின் அன்பிற்கீடாக
எதை நான் தருவேன் இறைவா

குறை நான் செய்தேன் இறைவா - பாவக்
குழியில் விழுந்தேன் இறைவா
கறையாம் பாவத்தை நீக்கிடவே - நீ
கல்வாரி மலையில் இறந்தாயோ

பாவம் என்றொரு விஷத்தால் - நான்
பாதகம் செய்தேன் இறைவா
தேவனே உன் திருப்பாடுகளால் - என்னைத்
தேற்றிடவோ நீ இறந்தாயோ

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

20. காணிக்கை தரும் நேரம் | Kanikkai Tharum Neram


காணிக்கை தரும் நேரம்- நான்
என் ம‌ன‌ம் த‌ருகின்றேன்-2
ஏற்ற‌ருளும் தெய்வ‌மே
எளிய‌வ‌ன் த‌ருகின்ற‌ காணிக்கையை-2

ப‌டைப்புக்க‌ள் ப‌ல‌வாகினும்
ப‌ர‌ம‌ன் உம‌க்கே சொந்த‌ம் -2-அதில்
ம‌ல‌ராகும் என் ம‌ன‌ம் உன்னிட‌த்திலே-2
ம‌ண‌ம் காண‌ ஏற்றிடுமே-2

பிற‌ர‌ன்பு ப‌ணிக‌ளெல்லாம்
த‌லைவ‌ன் உம‌த‌ன்றோ-2- என்றும்
உம‌த‌ன்புப் ப‌லியினில் என் வாழ்வினை-2
ப‌லியாக‌ ஏற்றிடுமே-2

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

திருப்பலி வருகைப் பாடல்கள் | Tamil Catholic Mass Entrance Songs

1. இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி | Iraimakkal Agamahizhnthu Varugintra Thirupavani

இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி
திருச்சபை இணைந்து கிறிஸ்துவோடு தருமே தியாகப்பலி
 

வாராய் இறைதிருக்குலமே வாழ்வாய் பேறுடனே - 2  

மலருடன் சேரும் யாவுமே மணம் பெற்று வாழ்தல் நீதியே - 2
புவிவாழ்வை நாமும் தரவே இறைமாண்பை இன்றே பெறவே
விரைவாய் வருவோம் தேவன் அருள் பெறுவோம்
இறைவன் நிழலில் வாழ்வின் பொருள் பெறுவோம் -வாராய்

மகிழ்வுடன் பாடும் வேளையே மனங்களின் சோர்வை நீக்குமே - 2
திருவாழ்வை தேடி பெறுவோம் மறைவாழ்வின் நன்மை அடைவோம்
பணிவாய் குலமாய் இயேசு பதம் இணைவோம்
மறையின் வழியில் வேத ஒளி பெறுவோம்  -வாராய்


|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

2. அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே | Anbinil Pirantha Iragulam Namae

அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே - 2

ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்
அருள் ஒளி வீசும் ஒரு வழி போவோம் - 2
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் - 2
பரிவுள்ள இறைவனின் திருவுளம் காண்போம்

பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி
பெருமை செய்தாரே புனித பேரன்பை - 2
பிறந்த நம் வாழ்வின் பயன்பெற வேண்டும் - 2
பிறரையும் நம்மைப் போல் நினைத்திட வேண்டும்
 

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

3. அழைக்கும் இறைவன் குரலைக் கேட்டு| Azhaikkum Iraivan Kuralai Kaettu

அழைக்கும் இறைவன் குரலைக் கேட்டு எழுந்து வாருங்கள்
அழைக்கும் அவரில் சங்கமமாக விரைந்து வாருங்கள் - 2
பலி செலுத்திடவே பலன் அடைந்திடவே - 2
படைத்த தேவன் புகழை
ப் பரப்ப பணிந்து வாருங்கள்

பாதை காட்டும் ஆயனாக இறைவன் அழைக்கின்றார்
பாவம் நீக்கி பாசம் காட்ட தேவன் அழைக்கின்றார் -2
அன்பின் ஆட்சியே அவரின் மாட்சியே -2

பரமதேவன் புகழைப் பரப்ப பணிந்து வாருங்கள்

வாழ்வு வழங்கும் வார்த்தையாக வாழ அழைக்கின்றார்
வாரி வழங்கும் வள்ளலாக பரமன் அழைக்கின்றார் - 2
நிறைந்த வாழ்விலே நம்மை நிரப்பவே - 2
இனிய தேவன் நம்மை அழைக்க இணைந்து வாருங்கள்

 

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| 

4. அழைக்கிறார் இயேசு ஆண்டவர் | Azhaikiraar Yesu Andavar

அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம் - 2
அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட - 2
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே
 

தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மைத் தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் - 2
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்

அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
விடியலின் கீதமாக முழங்குவார்
விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் - 2

வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்


||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| 

5. உன் இதய வாசல் தேடி வருகிறேன் | Un Ithaya Vasal Thedi Varugintren

உன் இதய வாசல் தேடி வருகிறேன்
என் இதயம் உறைய என்னில் வாருமே
நீ இல்லையேல் நானில்லையே - 2
நான் வாழ என்னுள்ளம் வா

காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம்
காற்றசைய மறக்கலாம் கடலசைய மறக்கலாம்
உன் அன்பு என்றென்றும் மாறாதய்யா
உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனய்யா

குயில் பாட மறக்கலாம் மயில் ஆட மறக்கலாம்
நயமுடனே நண்பரும் என்னைவிட்டுப் பிரியலாம்
உன் அன்பு என்றென்றும் மாறாதய்யா
உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனய்யா 

உருவங்கள் மாறலாம் உருமாறிப் போகலாம்
உருகும் மனம் கருகலாம் உறவும் என்னை வெறுக்கலாம்
உன் அன்பு என்றென்றும் மாறாதய்யா
உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனய்யா   


||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| 

6. அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம் | Archanai Malaraga Aalayatthil Varugintrom

அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்
ஆனந்தமாய் புகழ்கீதம் என்றும் பாடுவோம் - 2
அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட
ஆசையோடு அருள் வேண்டிப் பணிகின்றோம் - 2
 

தாயின் கருவிலே உருவாகும் முன்னரே
அறிந்து எங்களை தேர்ந்த தெய்வமே
பாவியாகினும் பச்சைப் பிள்ளையாகினும்
அர்ச்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர்
மனிதராகப் புனிதராக வாழப் பணிக்கின்றீர்
பிறரும் வாழ எங்கள் வாழ்வைக் கொடுக்க அழைக்கின்றீர்
அஞ்சாதீர் என்று நம்மைக் காத்து வருகின்றீர்

 

உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர்
உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர்
உமது மாட்சியை எம்மில் துலங்கச் செய்கின்றீர்
உமது சாட்சியாய் நாங்கள் விளங்கச் சொல்கின்றீர்
அழித்து ஒழிக்க கவிழ்த்து வீழ்த்த திட்டம் தீட்டினீர்
கட்டி எழுப்ப நட்டு வைக்க எம்மை அனுப்பினீர்

அஞ்சாதீர் என்று நம்மைக் காத்து வருகின்றீர்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||  

7. இணைந்திடுவோம் இறைமக்களே | Inainthiduvom Iraimakkalae

இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் சந்நிதியில்
சுமைகளைத் தாங்கி சுகமே கொடுக்கும் இயேசுவின் பலியினிலே இணைவோம் இயேசுவின் பணியினிலே
 

கூடிடுவோம் குடும்பமாய் கூடிடுவோம்
மாறிடுவோம் இறைசமூகமாய் மாறிடுவோம்

 

மூவொரு கடவுளின் முடிவில்லா பிரசன்னம்
குடும்பமாய் இணைக்கின்றது
நம்மைக் குடும்பமாய் இணைக்கின்றது  (2)
பலியினில் கலந்து உறவினில் இணைய
நம்மையே அழைக்கின்றது -இன்று  (2) -கூடிடுவோம்


இயேசுவில் வாழ்ந்திட வாழ்வையே பலியாக்க
பாதை காட்டுகின்றது புதிய பாதை காட்டுகின்றது  (2)
சோதனை வென்று சாதனை படைக்க
ஆற்றல் தருகின்றது  -நமக்கு
(2) -கூடிடுவோம் 

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||  

8. அருட்கரம் தேடி உன் ஆலயப்பீடம் | Arudkaram Thaedi Un Aalaya Peedam

அருட்கரம் தேடி உன் ஆலயப்பீடம்
அலையலையாக வருகின்றோம்
அருவியாய் வழியும் உன் அருளினில் நனைய
ஆனந்தமாக வருகின்றோம் - 2
 

ஆயிரம் ஆயிரம் ஆசைகளால்
ஆடிடும் ஓடமாய் எம் வாழ்க்கை - 2
மூழ்கிடும் வேளையில் எம் இறைவா உன்
கரம் தானே எம்மைக் கரை சேர்க்கும்
பெரும் புயலோ எழும் அலையோ நிதம் வருமோ ஒளியிருக்க - 2
நாளுமே எம்மைக் காத்திடும் உந்தன்

ஆறுதல் வேண்டும் எம் இதயங்களோ
அன்பினைத் தேடி அலைகின்றதே - 2
தேற்றிட விரையும் எம் தலைவா - உம்
தெய்வீகக் கரம் தானே எமைத் தேற்றும்
கொடும் பிணியோ வரும் பரிவோ
துயர் வருமோ துணையிருக்க - 2
நாளுமே அன்பால் ஆறுதல் வழங்கும் 

 

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||  

9. வரம் கேட்டு வருகின்றேன் இறைவா | Varam Kaettu Varugintren Iraiva

வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - என்
குரல் கேட்டு அருளாயோ தலைவா - 2
 

பகைசூழும் இதயத்துச் சுவரை எல்லாம் - என்
பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன் - 2
புகை சூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம் - 2 - உன்
பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன்

 

நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் - இனி
நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன் - 2
பலியாகப் பிறர்க்கென்னை அளித்திட்ட பின் - 2 - என்
பரிசாக உனைக் கேட்கும் வரம் கேட்கின்றேன்

எளியோர் தம் விழி பேசும் துயரமெல்லாம் - என்
இதயத்தைப் பிளக்கட்டும் எனக் கேட்கின்றேன் - 2
ஒளியில்லா இல்லங்கள் இதயங்களில் - 2 - நல்
ஒளியேற்றும் விளக்காக வரம் கேட்கின்றேன்

நம்பிக்கை இழந்தோரெம் முகம் பார்த்த பின் - நல்
நம்பிக்கைப் பெற வேண்டும் எனக் கேட்கின்றேன் - 2
அன்பிற்காய் நான் வாழும் விதம் பார்த்த பின் - 2 - உன்
அன்பெண்ணி வர வேண்டும் உனைக் கேட்கின்றேன்

 

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||  

10. வாருங்கள் இறைமக்களே | Varungal Iraimakkalae 

வாருங்கள் இறைமக்களே
இறைமகன் காட்டிய முறைதனில் பலியிட 

வாருங்கள் இறைமக்களே
 

குருவுடன் கூடி குடும்பமாய் மாறி - 2
இறைவனை உண்டு புனிதராய் மாறிட
 

இறைவனின் வார்த்தையை இதயத்தில் ஏற்று - 2
இனிவரும் வாழ்வில் புது ஒளி பெறவே

பகைமையை ஒழித்து புலன்களை அறுத்து - 2
நலன்களை நாடியே நன்மைகள் அடைந்திட


||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| 

11. திருக்குலமே எழுந்திடுக | Thirukkulamae Elunthiduga

திருக்குலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே
ஒருங்கிணைவோம் கரம் குவிப்போம் உன்னதரைப் போற்றுவோம்
ஆகா சந்தோஷம் பெருகிடுதே அவர் சந்நிதி காண்கையிலே - 2

ஆனந்தமுடனே அவர் திருமுன்னே கூடிடுவோம் - 2
ஆண்டவரே நம் கடவுள் என்று பாடிடுவோம் - 2
அவரே நம்மை படைத்தார் அவருக்கே சொந்தம் நாம்
அவர் படைப்புகள் நாம் அவர் பிள்ளைகள் நாம்
அவர் மந்தையின் ஆடுகள் நாம்

இன்னிசை முழங்க இறைவன் வாசல் நுழைந்திடுவோம் - 2
பண்ணிசையோடு அவரது பீடம் சூழ்ந்திடுவோம் - 2
அவரைப் புகழ்ந்திடுவோம் அவர் பெயர் வாழ்த்திடுவோம்
அவர் நல்லவராம் அவர் வல்லவராம் அவர் அன்பே நமை நடத்தும்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||   

12. வாருங்கள் இறைமக்களே  | Vaarungal Iraimakkalae 

வாருங்கள் இறைமக்களே கடல் அலையெனவே வாரீர்
நாம் அன்புள்ளம் கொண்டு ஓரினமாக
அவர் புகழ் பாடிடுவோம் நாளும் அவர் வழி நடந்திடுவோம்

சிறுதுளி பெருவெள்ளம் ஆகிடுமே
எளியவர் நலம் பெற இணைந்திடுவோம் - 2
வறியவர் வாழ்வும் உயர்ந்திடுமே
வறுமையின் அவலங்கள் அகற்றிடுவோம்
தேவன் அரசும் மலர்ந்திடுமே அன்பும் நீதியும் வளர்த்திடுவோம்

அருள் ஒளி மனதினில் கலந்திடவே
கறைகளை இதயத்தில் களைந்திடுவோம் - 2
மனிதனில் மனிதம் மலர்ந்திடவே
எழுகின்ற தீமைகள் அழித்திடுவோம்
உரிமைகள் உடைமைகள் அடைந்திடவே
இயேசுவின் கொள்கைகள் ஏற்றிடுவோம்

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| 

13. தலைவா உனை வணங்க | Thalaiva Unai Vananka

தலைவா உனை வணங்க - என்
தலைமேல் கரம் குவித்தேன்
வரமே உனைக் கேட்க - நான்
சிரமே தாள் பணிந்தேன்


அகல்போல் எரியும் அன்பு - அது
பகல்போல் மணம் பரவும்
நிலையாய் உனை நினைத்தால் - நான்
மலையாய் உயர்வடைவேன் - 2
 

நீர்போல் தூய்மையையும் - என்
நினைவில் ஓடச் செய்யும்
சேற்றினில் நான் விழுந்தால் - என்னைச்
சீக்கிரம் தூக்கிவிடும் - 2


|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||


அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு | Anjathae Anjathae Nan Entrum Unnodu


அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு
எந்த துன்பம் வந்தாலும் என் அன்பு உன்னோடு

குன்று அசையலாம் குகைகள் பெயரலாம்
உலகம் முழுவதும் உன்னை வெறுக்கலாம்
என்ன நிலைதான் ஆனாலும் எந்தன் அன்பு மாறாது
அஞ்சாதே அஞ்சாதே உன்னைநான் காப்பேன் --2

அன்னை குழந்தையை அணைக்க மறப்பாளோ
சின்ன துன்பமும் நெருங்க விடுவாளோ
அன்னை உன்னை மறந்தாலும் உன்னை நானோ மறவேனே
அஞ்சாதே அஞ்சாதே உன்னைநான் காப்பேன் --2

Wednesday 1 May 2013

புனித சூசையப்பர் பாடல்கள் | St. Joseph's Songs Lyrics


1. எங்கள் காவலாம் சூசை தந்தையின் | Engal Kavalam Soosai Thanthaiyin



எங்கள் காவலாம் சூசை தந்தையின்
மங்களங்கள் எங்கும் சொல்லி இங்குப் பாடுவோம் -2
செங்கை அதிலே தங்க புஷ்பம்
தங்கும் கோலை ஏந்திடும் -2

கன்னித் தாயாரின் பர்த்தா நீயல்லோ
உன்னதமார் பேறும் மாட்சி உற்ற பாக்கியனே  -2
சென்னி மகுட முடி புனைந்த
மன்னர் கோத்ர மாதவா  -2

இயேசு நாதரின் செல்வத் தாதை நீ
நேச புத்திர துதியாம் பாடக் கூடி வந்தோமே -2
தேசம் ஒருங்கும் திசைகள் எங்கும்
ஆசைகொண்டு பாடவே  -2

தந்தை என்றுன்னை வந்து பாடினோம்
உந்தன் மைந்தன் சொந்தமென்று எம்மை காத்திட்டாய்  -2
அந்திக்காலை வந்த வேளை
வந்து உதவி செய்திட்டாய்   -2


Engal Kavalam soosai thanthaiyin
Mangalangal engum solli ingu paduvom -2
Sengai athilae thanga puahbam
thangum kolai yenthidum -2

Kanni Thayarin partha neeyallo
unnathamar perum matchi utta pakkiyanae -2
Senni mahuda mudi punaintha
mannar kothra mathava -2

Yesunatharin selva thathai nee
nesa puthra thuthiyaam pada koodi vanthomae -2
Thesam orungum thisaigal engum
Aasai kondu padavae -2

Thanthai entrunnai vanthu padinom
unthan mainthan sonthamentru emmai katthittai -2
Anthikalai vantha velai
vanthu uthavi seithittai -2

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

2. மதுமலர் நிறைகொடி கையிலேந்தும் | Mathumalar Niraikodi Kaiyilanthum

 
மதுமலர் நிறைகொடி கையிலேந்தும்
மாட்சிமை நிறைசூசை மாமுனியே
துதிவளர் உமது நற்பதம் வந்தோம்
துணை செய்து எமையாளும் தாதையரே

வானுலகிழந்ததால் கர்வமுற்ற
வன்மனக் கூளியின் வலையறுக்க
தான் மனுவாய் உதித்த கடவுள்
தாதையாம் சூசை உன் தஞ்சம் வந்தோம்

ஒளிநிறை கதிரோனை ஆடை எனும்
உடுவதைத் தலையிலும் முடிபுனைந்த
துளிநிகர் அருள்பொழி மாமரியாள்
துணைவனாம் சூசை உன் துணைபுரிவாய்

தூதர் வானோர்க்கு மேலாய் உயர்ந்து
துலங்கும் சிம்மாசனந் தனிலிருந்து
ஆதிரையோரைக் கண் பார்த்துனது
ஆசியை அளித்தருள் மாதவனே

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

மாண்புயர் இவ்வருள் அனுமானத்தை | Manbuyar Ivvarul Anumanathai



மாண்புயர் இவ்வருள் அனுமானத்தை
தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்
பழைய நியம முறைகள் அனைத்தும்
இனி மறைந்து முடிவு பெறுக
புதிய நியம முறைகள் வருக
புலன்களாலே மனிதன் இதனை
அறிய இயலாக் குறையை நீக்க
விசுவாசத்தின் உதவி பெறுக

பிதா அவர்க்கும் சுதன் அவர்க்கும்
புகழ்ச்சியோடு வெற்றி ஆர்ப்பும்
மீட்பின் பெருமை மகிமையோடு
வலிமை வாழ்த்து யாவும் ஆக
இருவரிடமாய் வருகின்றவராம்
தூய ஆவியானவர்க்கும்
அளவில்லாத சமபுகழ்ச்சி
என்றுமே உண்டாகுக.
ஆமென்

Manbuyar ivvarul Anumanathai
Thazhnthu paninthu Aarathippom
pazhaiya niyama muraigal anaitthum
Ini marainthu mudivu peruga
puthiya niyama muraigal varuga
pulangalalae manithan ithanai
ariya iyala kuraiyai neeka
visuvasathin uthavi peruga

Pitha avarkkum suthan avarkkum
pugazhchiyodu vettri aarppum
meetpin perumai mahimaiyodu
valmai vazhthu yavum aaga
iruvaridamai varugintravaram
thooya aaviyanavarkkum
alavillatha sama pugazhchi
entrumae undaguga. Amen.