Saturday 11 May 2013

ஆனந்த மழையில் நானிலம் மகிழ | Ananda Mazhaiyil Nanilam Mahizha

ஆனந்த மழையில் நானிலம் மகிழ
மன்னவன் எழுகின்றார்
ஆயிரம் நிலவொளியோ -என்னை
ஆண்டிடும் இறையரசோ
அவனியை மாற்றிடும் அருட்கடலோ

மன்னவனே என்னிதயம் பொன்னடி பதிக்கின்றாய்
விண்ணகமே என் இதயம் அன்புடன் அமைக்கின்றாய்
இனி என் வாழ்விலே ஒரு பொன்னாளிது
பண்பாடவோ என்றும் கொண்டாடவோ
மலர்கின்ற புது வாழ்விலே - இனி
சுகமான புது ராகமே
என்றென்றும் உண்டாகும் பேரின்பமே
பேரின்பமே பேரின்பமே

சேற்றினிலே தாமரையாய் தேர்ந்தென்னை எடுத்தாயோ
காற்றினிலே நறுமணமாய் கலந்தென்னில் நிறைந்தாயோ
எனில் ஒன்றாகினாய் நான் நன்றாகினேன்
பணிவாழ்வுக்காய் என்னைப் பரிசாக்கினேன்
மலர்கின்ற புது வாழ்விலே - இனி
சுகமான புது ராகமே
என்றென்றும் உண்டாகும் பேரின்பமே
பேரின்பமே பேரின்பமே

No comments:

Post a Comment