Sunday 28 April 2013

நானே வானினின்று இறங்கி வந்த | Naanae Vaaninintru Irangi Vantha

நானே வானினின்று இறங்கி வந்த
உயிருள்ள உணவு
இதை யாராவது உண்டால்
அவன் என்றுமே வாழ்வான் (2)

எனது உணவை உண்ணும் எவனும்
பசியை அறிந்திடார் (2) -என்றும்
எனது குருதி பருகும் எவரும்
தாகம் தெரிந்திடார்

அழிந்து போகும் உணவுக்காக
‌உழைத்திட வேண்டாம் (2) -என்றும்
அழிந்திடாத வாழ்வு கொடுக்கும
உணவிற்கே உழைப்பீர்

மன்னா உண்ட முன்னோர் எல்லாம்
மடிந்து போயினர் (2) -உங்கள்
மன்னன் என்னை உண்ணும் எவரும்
மடிவதே இல்லை

No comments:

Post a Comment