Sunday 28 April 2013

நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம் | Nee illatha Ullam Oor Palaivanam




நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம்
எந்நாளும் உனக்காக ஏங்கும் மனம்   (2)
 

இறைவா இறைவா இறைவா இறைவா

மழையாக வந்தும் மனம் மீது நின்றும் நனையாத நிலமாகினேன்
ஒளியாக நிறைந்தும் வாழ்வோடு இணைந்தும்
விடிவில்லா இரவாகினேன்  (2)
உயிரூட்டும் அருள்மேகம் எனைச் சூழுமோ
வாழ்வேற்றும் ஒளிவெள்ளம் எனை ஆளுமோ  (2) -இறைவா

கண்ணீரில் மூழ்கி போராடும் நிலைபோல்
தவிக்கின்றேன் உனைத் தேடியே
போர் வந்த காலம் துடிக்கின்ற புவிபோல்
அழுகின்றேன் துணை நாடியே   (2)
எதனாலும் நிறையாத வெறுமையிது - உன்
அருளின்றி துயிலாத இதயம் இது   (2) -இறைவா 

No comments:

Post a Comment