Sunday 28 April 2013

அஞ்சாதே நான் என்றும் உன்னோடு | Anjathae Naan Entrum Unnodu

அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு
எந்தத் துன்பம் வந்தாலும் என் அன்பு உன்னோடு - 2

குன்று அசையலாம் குகைகள் பெயரலாம்
உலகம் முழுவதும் உன்னை வெறுக்கலாம் - 2
என்ன நிலைதான் ஆனாலும் எந்தன் அன்பு மாறாது
அஞ்சாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் - 2

அன்னை குழந்தையை அணைக்க மறப்பாளோ
சின்ன துன்பமும் நெருங்க விடுவாளோ - 2
அன்னை உன்னை மறந்தாலும்
உன்னை நானோ மறவேனே அஞ்சாதே


No comments:

Post a Comment