Sunday 28 April 2013

எந்தன் ஜெபவேளை உமைத் தேடிவந்தேன் | Enthan Jebavelai Umaithedi Vanthaen

எந்தன் ஜெபவேளை உமைத் தேடிவந்தேன் தேவா பதில் தாருமே - 2
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடிவந்தேன் - 2


சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே
தடை யாவும் அகற்றிடுமே
தயைவேண்டி உம் பாதம் வந்தேன் - 2

உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையைக்
கேட்டிடக் காத்திருப்பேனே - 2 

No comments:

Post a Comment