Sunday 28 April 2013

ஆனந்த மழையில் நானிலம் மகிழ | Ananda Mazhaiyil Nanilam Mahizha

ஆனந்த மழையில் நானிலம் மகிழ மன்னவன் எழுகின்றான் - 2
ஆயிரம் நிலவொளியோ எனை ஆண்டிடும் இறையரசோ
அவனியை மாற்றிடும் அருட்கடலோ

மன்னவனே என் இதயம் பொன்னடி பதிக்கின்றான்
விண்ணகமே என் இதயம் அன்புடன் அழைக்கின்றான் - 2
இனி என் வாழ்விலே ஒரு பொன்னாளிதே
பண்பாடவோ என்றும் கொண்டாவோ
மலர்கின்ற புதுவாழ்விலே இனி சுகமான புதுராகமே
என்றென்றும் உண்டாகும் பேரின்பமே - 3

சேற்றினிலே தாமரையாய் தேர்ந்தென்னை எடுத்தானே
காற்றிலே நறுமணமாய் கலந்தென்னில் நிறைந்தானே - 2
எனில் ஒன்றாகினான் நான் நன்றாகினேன்
பணிவாழ்வுக்காய் என்னைப் பரிசாக்கினேன்

மலர்கின்ற புதுவாழ்விலே இனி சுகமான புதுராகமே
என்றென்றும் உண்டாகும் பேரின்பமே - 3


No comments:

Post a Comment