Monday 22 April 2013

அழகின் முழுமையே தாயே | Azhakin Mulumaiyae Thayae

அழகின் முழுமையே தாயே
அலகையின் தலைமிதித்தாயே
உலகினில் ஒளி ஏற்றிடவே அமலனை எமக்களித்தாயே

இருளே சூழ்ந்திடும் போதே உதயத் தாரகை போலே -2
அருளே நிறைந்த மாமரியே
அருள் வழி காட்டிடுவாயே

அன்பும் அறமும் செய்வோம் அன்னை உனைப் பின் செல்வோம் -2
உன்னைத் துணையாய்க் கொள்வோம்
என்றும் பாவத்தை வெல்வோம்

3 comments: