Monday 22 April 2013

அம்மா அமுதினும் இனியவளே | Amma Amuthinum Iniyavalae

அம்மா அமுதினும் இனியவளே அமலியாய் உதித்தவளே
அகமே மகிழ்வாய் மரியே --2

தேவனாம் ஆண்டவரைப் பூவினில் ஈன்றவளே --2
அருளினிலே உறைந்தவளே அடியவர் நாவில் நிறைந்தவளே

அமலியாய் அவதரித்தாய் அலகையின் தலைமிதித்தாய்
அவனியிலே அருள்பொழிவாய்
அடியவர் தாயாய் அமைந்திடுவாய்

அருள்நிறை மாமரியே அமல உற்பவியே --2
கறைபடா கன்னிகையே காத்திடுவாயே எம்மையே

1 comment: