Sunday 28 April 2013

அன்பே என்றானவா | Anbae Entranava

அன்பே என்றானவா என் எண்ணம் நிறைவானவா
உன் மேன்மை வானம் என்றாகினாலும்
என் ஏழ்மை குறை தீர்த்தவா - 2

வளம் காய்ந்து நிழல் தேடும் நேரங்களில்
வளமோடு எனைச் சூழும் நதியாகிறாய்
பிரிந்தோடி மனம் வாடும் வேளைகளில்
எனைத் தேற்றும் புது வாழ்வு மழையாகிறாய்
மலை போன்ற உன் அன்பு முன்னாலேதான் - 2
என் தாழ்வை உன் மாண்பை நான் காண்கிறேன் - 2

உன் பாதநிழல் போதும் என ஏங்கினேன்
உன் நெஞ்சமலராலே எனை மூடினாய்
கண் பார்வை அருள் போதும் என நாடினேன்
என் பாதை வழி செல்லும் துணையாகினாய்
மண்மீது காலூன்றும் தொடுவானமாய் - 2
என்மீது நீ வந்து நானாகிறாய் - 2 

No comments:

Post a Comment