Sunday 21 April 2013

நீ செய்த நன்மை நினைக்கின்றேன் | Nee Seitha Nanmai Ninaikintren

நீ செய்த நன்மை நினைக்கின்றேன் - என்
நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன்
இறைவா இறைவா இறைவா இறைவா

உண்டிட உணவும் உடையுமே கொடுத்து
ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் - ஒரு
அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து
அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய்

மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி
மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் - உடன்
உலரட்டும் என்றே ஒதுங்கி விடாமல்
களைகளை அகற்றிக் காத்து வந்தாய்

3 comments:

  1. I love Jesus 💙 in that song

    ReplyDelete
  2. Psalms 111 is the context please refer and develop it with extra lines the capable priests with Tamil poets or retired Tamil professors and teachers tqu for reading

    ReplyDelete